ADDED : மார் 22, 2024 01:28 AM
திருவனந்தபுரம்:'ராகுல், பிரதமர் ஆவார் என இப்போது யாரும் கூறுவதில்லை,'' என்று, முன்னாள் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
கேரள மாநில, பா.ஜ., தேர்தல் பொறுப்புக்குழு தலைவரான பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
'மத்தியில் மோடி அரசு மீண்டும் வரும்' என்று, காங்கிரஸ் தலைவர்கள் கூட உறுதியாக நம்புகின்றனர். பா.ஜ., கூட்டணிக்கு, 370 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக கிடைக்கும். தேர்தலுக்குப் பின், கேரளாவில் நிரந்தரமாக பல மாற்றங்கள் ஏற்படும். எந்த வித பாகுபாடும் பார்க்காமல் அனைத்து நலத்திட்டங்களின் பலன்களையும் கேரள மக்களுக்கு மோடி அளித்துள்ளார்.
வரும் 2047க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்படுகின்றன. மோடி அரசு தான் மீண்டும் வரும் என்று, எல்லா வாக்காளர்களுக்கும் தெரியும். 'ராகுல் பிரதமர் ஆவார்' என்று இப்போது யாரும் கூறுவதில்லை. கேரளாவில், 5 - 10 தொகுதிகள் வரை கண்டிப்பாக கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

