sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடிநீரில் கழிவுநீர் முதியவர் பலி

/

குடிநீரில் கழிவுநீர் முதியவர் பலி

குடிநீரில் கழிவுநீர் முதியவர் பலி

குடிநீரில் கழிவுநீர் முதியவர் பலி


ADDED : செப் 12, 2024 05:43 AM

Google News

ADDED : செப் 12, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: அசுத்தமான குடிநீர் குடித்ததில், ஒருவர் உயிரிழந்தார். மேலும் பாதிக்கப்பட்ட 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

மைசூரு, சாலிகிராமத்தின் பெட்டஹள்ளி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு, அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

நேற்று முன்தினமும் வழக்கம்போல் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. தண்ணீர் அசுத்தமாக இருந்ததாக புகார் எழுந்தது.

இதை குடித்த பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக சாலிகிராம சமுதாய சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். கோவிந்தேகவுடா, 65, என்பவர், தீவிர சிகிச்சைக்காக ஹாசன் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று காலையில் அவர் உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்ட மேலும் 12 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாலுகா மருத்துவமனை டாக்டர்கள், பெட்டஹள்ளி கிராமத்துக்கு வந்து, மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்கின்றனர்.

தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், கிராமத்துக்கு வந்தனர். மக்கள் பயன்படுத்திய குடிநீர் மாதிரியை சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us