ADDED : மார் 26, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாண்டியா: மாண்டியாவின் ஜி.கெப்பள்ளி கிராமத்தில், கால பைரவேஸ்வரா கோவில் திருவிழா நடந்தது. இதில் வாணவேடிக்கை நடத்த, தமிழகத்தில் இருந்து நால்வர் பட்டாசு கொண்டு வந்திருந்தனர். வீடு ஒன்றில் பட்டாசு சேகரித்து வைத்திருந்தனர்.
திருவிழா நேற்று முன் தினம் இரவு, திருவிழா முடிந்தது. அங்கேயே நால்வரும் உறங்கினர். நேற்று காலை வேறொரு கிராமத்துக்குச் செல்ல வேண்டியிருந்ததால், பட்டாசுகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் ரமேஷ், 67, உயிரிழந்தார்.
இருவர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.
இதுகுறித்து மாண்டியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

