sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அசுத்த நீர் குடித்து ஒருவர் உயிரிழப்பு

/

அசுத்த நீர் குடித்து ஒருவர் உயிரிழப்பு

அசுத்த நீர் குடித்து ஒருவர் உயிரிழப்பு

அசுத்த நீர் குடித்து ஒருவர் உயிரிழப்பு


ADDED : ஜூன் 25, 2024 04:55 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார் : மிஞ்சேனஹள்ளி கிராமத்தில் அசுத்தமான நீரை குடித்ததால் ஒருவர் உயிரிழந்தார். ஏழு பேர் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

கோலார் மாவட்டம், முல்பாகலின் ஊருகுன்டே கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது மிஞ்சேனஹள்ளி கிராமம். இங்கு கிராம பஞ்சாயத்து தொட்டியில் இருந்து, வீடுகளுக்கு குழாய் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சில நாட்களாக தண்ணீர் அசுத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை பயன்படுத்தியதில், கிராமத்தின் எட்டு பேர் உடல் நிலை பாதிப்படைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் வெங்கட ரமணப்பா, 50, உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

தகவலறிந்து அங்கு வந்த, கிராம பஞ்சாயத்து அதிகாரிகள், தண்ணீரை ஆய்வு செய்கின்றனர். தண்ணீர் மாதிரியை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

கிராம பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மா கூறுகையில், ''கிராமத்தில் சிலர் பாதிப்படைந்துள்ளது உண்மைதான். ஆனால் குடிநீரில் பிரச்னை இல்லை. அசுத்தமாகவும் இல்லை. சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us