ADDED : செப் 14, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : மனநலக் காப்பகத்தில், 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில், காப்பக டாக்டரை பணி நீக்கம் செய்ய டில்லி மாநில துணைநிலை கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
புதுடில்லியில் உள்ள மனநலக் காப்பத்தில் ஜூலை மாதம் 14 பேர் உயிரிழந்தனர்.
விசாரணையில் ஊட்டச் சத்து குறைபாடு, உணவுப் பற்றாக்குறை மற்றும் மருத்துவ வசதி குறைபாடு, ஒரே அறையில் அளவுக்கு அதிகமானோரை தங்க வைத்தது, தொற்றுநோய் பரவல், குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றால் 14 பேர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
விசாரணைக் குழு அறிக்கையை பரிசீலித்த டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, காப்பக நிர்வாகி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், விசாரணைக்கு இடையூறாக இருந்த காப்பக டாக்டரை பணிநீக்கம் செய்யவும் டில்லி தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.