sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஓவர் ஸ்பீடு: விசாரித்த போலீஸ் ஸ்டேஷன் மீது 100 பேர் தாக்குதல்

/

ஓவர் ஸ்பீடு: விசாரித்த போலீஸ் ஸ்டேஷன் மீது 100 பேர் தாக்குதல்

ஓவர் ஸ்பீடு: விசாரித்த போலீஸ் ஸ்டேஷன் மீது 100 பேர் தாக்குதல்

ஓவர் ஸ்பீடு: விசாரித்த போலீஸ் ஸ்டேஷன் மீது 100 பேர் தாக்குதல்

2


ADDED : ஜூலை 28, 2024 09:12 PM

Google News

ADDED : ஜூலை 28, 2024 09:12 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஓவர் ஸ்பீடு குறித்த விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையில் 100 பேர் கொண்ட கும்பல் போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதலை நடத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் ஷிங்கர் பகுதிக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன் அருகே செக் போஸ்ட் அமைக்கப்பட்டு இருந்தது. இப்பகுதியில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடைக்காரர் ஒருவர் தனது மகனுடன் ஸ்கூட்டரில் ஓவர் ஸ்பீடு ஆக கடந்து சென்றார். அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்ததுவற்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்டார். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து கடைக்காரர் தனது மகனுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் 100க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று அப்பகுதிக்கு வந்து சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் இருந்த பூந்தொட்டிகளை உடைத்ததுடன், அலுவகத்தை சூறையாடினர். மேலும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த உதவி சப்இன்ஸ்பெக்டர் ஒருவரையும் தாக்கியது. தொடர்ந்து மற்றொரு போலீசாரையும் கும்பல் தாக்கி உள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் கடைக்காரர் மற்றும் அவரது ஆதரவாளர்களை அடையாளம் காண, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.






      Dinamalar
      Follow us