sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வெள்ளக்காடாக மாறிய பாலக்காடு

/

வெள்ளக்காடாக மாறிய பாலக்காடு

வெள்ளக்காடாக மாறிய பாலக்காடு

வெள்ளக்காடாக மாறிய பாலக்காடு


ADDED : ஜூலை 31, 2024 02:15 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

நெம்மாரா என்ற பகுதியில் நேற்று காலை 6:00 மணிக்கு கனமழை பெய்தபோது வீடு இடிந்து விழுந்ததில், பழனியம்மாள், 78, என்ற பெண், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.

காயங்களுடன் தப்பிய அவரது மகள் பாப்பாத்தியை அப்பகுதி மக்கள் மீட்டு, நெம்மாரா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பாலக்காடு நகரப் பகுதியான சேகரீபுரம், ஒலவக்கோடு, புத்துார், காவில்பாடு ஆகிய பகுதியில் உள்ள காலனிகளில் மழை வெள்ளம் புகுந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், போலீசார், ஊர் மக்களுடன் சேர்ந்து படகு வாயிலாக, அப்பகுதியில் சிக்கித் தவித்தவர்களை மீட்டு, நிவாரண முகாமுக்கு அனுப்பினர்.

ஆலத்துார் விழுமலை, தயறாடி மைலம்பாடி, மங்கலம் அணை ஒடம்தோடு, கடப்பாறை, வட்டப்பாறை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. பாதிப்படைந்த இப்பகுதியில் வசிக்கும் மக்கள், அருகிலுள்ள நிவாரண முகாமுக்கு மாற்றப்பட்டனர்.

பாலக்காடு மாவட்டத்தில் அனைத்து ஆறுகளிலும் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மாவட்டத்திலுள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலா தலங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.






      Dinamalar
      Follow us