sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏழு மாவட்ட மக்கள் பயனடைவர் எத்தினஹொலே குடிநீர் திட்டம் துவக்கம்

/

ஏழு மாவட்ட மக்கள் பயனடைவர் எத்தினஹொலே குடிநீர் திட்டம் துவக்கம்

ஏழு மாவட்ட மக்கள் பயனடைவர் எத்தினஹொலே குடிநீர் திட்டம் துவக்கம்

ஏழு மாவட்ட மக்கள் பயனடைவர் எத்தினஹொலே குடிநீர் திட்டம் துவக்கம்


ADDED : செப் 07, 2024 07:46 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாசன்: ஏழு மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், எத்தினஹொலே குடிநீர்த் திட்டத்தை, முதல்வர் சித்தராமையா நேற்று துவக்கிவைத்தார்.

கோலார், சிக்கபல்லாபூர், பெங்களூரு ரூரல், ராம்நகர், துமகூரு, ஹாசன், சிக்கமகளூரு ஆகிய ஏழு மாவட்டங்களில், குடிநீர்த் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2014ல் எத்தினஹொலே குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டது.

ஹாசனின் சக்லேஷ்பூரில் இருந்து பூமிக்கு அடியில் குழாய் பதித்து, மற்ற மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

ஏழு மாவட்டங்களில் உள்ள 6,657 கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வது இந்தத் திட்டத்தின் நோக்கம். திட்டப்பணிகள் இரண்டு கட்டங்களாக நடந்தன.

தற்போது முதற்கட்ட பணிகள் முடிந்துள்ளன. ஹாசனின் சக்லேஷ்பூர் பைக்கரே பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், எத்தினஹொலே குடிநீர்த் திட்டத்தை முதல்வர் சித்தராமையா துவக்கிவைத்தார்.

பின், அவர் பேசியதாவது:

எத்தினஹொலே குடிநீர்த் திட்டப் பணிகள், இரண்டு கட்டங்களாக நடக்கின்றன. 2027ம் ஆண்டு இரண்டாவது கட்ட பணிகளும் நிறைவடையும். இந்தத் திட்டம் வாயிலாக ஏழு மாவட்டத்தில் உள்ள, லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீர் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தை பற்றி சிலர், மக்கள் கண்முன் பொய் பேசுவர். திட்டத்தை தவறாக சித்தரிப்பர். அவர்களை யாரும் நம்ப வேண்டாம். கடந்த முறை முதல்வராக இருந்தபோது, எத்தினஹொலே திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். இப்போது பணிகளை துவக்கி வைத்து உள்ளேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நனவாகி உள்ளது'

துணை முதல்வரும், நீர்பாசன அமைச்சருமான சிவகுமார் அளித்த பேட்டி:கர்நாடக நீர்பாசன வரலாற்றில் இன்று முக்கியமான நாள். நுாற்றுக்கணக்கான விமர்சனங்களுக்குப் பிறகு, எத்தினஹொலே குடிநீர்த் திட்டப் பணிகளின் ஒரு கட்டம் முடிந்து தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.பத்து ஆண்டுகள் முயற்சி இன்று நனவாகி உள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் எனக்கு, மின்சார அமைச்சர் பொறுப்பு கொடுத்தார். இப்போது என்னை நம்பி நீர்பாசனத்துறையை அளித்தார். எத்தினஹொலே முதற்கட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளோம். வரும் 2027ல் இரண்டாம் கட்டத்தையும் முடித்து சாதனை படைப்போம். இது எனது உறுதிமொழி.எத்தினஹொலே திட்டம் நிறைவேற்றப்பட்டால், தலையில் மொட்டை அடிப்பேன் என்று யாரோ சொன்னார்கள். இந்த திட்டத்தை பார்த்து கொதிப்பவர் கொதிக்கட்டும். வயிறு எரிபவர்கள் எரியட்டும். நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன். திட்டத்திற்கு எதிராக சிலர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு செய்தனர். ஆனால் அனைத்து சர்ச்சைகளையும் தாண்டி வெற்றி அடைந்துள்ளது.எத்தினஹொலே திட்டத்தை நிறைவேற்ற 23,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறோம். பணத்தை விட மக்களின் நலன் தான் முக்கியம். முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லியின் ஆசை நிறைவேறி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us