மோடியுடன் பினராயி சந்திப்பு: வயநாடு மறு சீரமைப்புக்கு நிதி கோரினார்
மோடியுடன் பினராயி சந்திப்பு: வயநாடு மறு சீரமைப்புக்கு நிதி கோரினார்
ADDED : ஆக 27, 2024 09:43 PM

புதுடில்லி: கேரள வயநாடு மறு சீரமைப்புக்கு நிதி ஒதுக்கிட கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு, உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
சமீபத்தில் வயநாடு வந்திருந்த பிரதமர் மோடி இங்கு நிலச்சரிவு பாதிப்பிற்குள்ளான பகுதிகளை பார்வையிட்டார்.
இந்நிலையில் இன்று டில்லி சென்றிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது வயநாடு மறு சீரமைப்புக்கு தேவையான மத்திய அரசு நிதியை ஒதுக்கி , அதற்கான பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
சிக்கிம் மாநில முதல்வர் பிரேம்சிங் தமங் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.