sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பள்ளி ஆசிரியை மீது 'போக்சோ' வழக்கு

/

பள்ளி ஆசிரியை மீது 'போக்சோ' வழக்கு

பள்ளி ஆசிரியை மீது 'போக்சோ' வழக்கு

பள்ளி ஆசிரியை மீது 'போக்சோ' வழக்கு


ADDED : ஜூலை 06, 2024 05:44 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெங்கடேசபுரம்: பெங்களூரில், 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நர்சரி பள்ளி ஆசிரியை மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பெங்களூரு வெங்கடேசபுரம், அன்வர் லே - அவுட்டில், தனியார் நர்சரி பள்ளி உள்ளது. இப்பள்ளி ஆசிரியை, தங்கள் 3 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார், என்று அவரது பெற்றோர், கே.ஜி.,ஹள்ளி போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின்படி, ஆசிரியை மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். குழந்தையின் பெற்றோர் கூறுகையில், 'எங்கள் மகளை, வெங்கடேசபுரத்தில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் சேர்த்தோம்.

ஜூன் 6ம் தேதியில் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறாள். கடந்த 10 நாட்களாக, பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்க துவங்கினாள்.

'ஏன் என்று கேட்டபோது, தனக்கு அந்தரங்க பகுதி வலிக்கிறது, 'மேடம்' என்று கூறினாள். உடனடியாக குழந்தையை, வாணி விலாஸ் மருத்துவமனையில் சேர்த்து, போலீசில் புகார் அளித்து உள்ளோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us