sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மே.வங்க கவர்னர் மீது பாலியல் புகார் கவர்னர் மாளிகைக்குள் போலீசுக்கு தடை

/

மே.வங்க கவர்னர் மீது பாலியல் புகார் கவர்னர் மாளிகைக்குள் போலீசுக்கு தடை

மே.வங்க கவர்னர் மீது பாலியல் புகார் கவர்னர் மாளிகைக்குள் போலீசுக்கு தடை

மே.வங்க கவர்னர் மீது பாலியல் புகார் கவர்னர் மாளிகைக்குள் போலீசுக்கு தடை

2


ADDED : மே 04, 2024 12:37 AM

Google News

ADDED : மே 04, 2024 12:37 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா, மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தற்காலிக பெண் பணியாளர் அளித்த புகாரை அடுத்து, கவர்னர் மாளிகைக்குள் போலீஸ் நுழைய தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

மம்தா அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கவர்னர் முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், கவர்னர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக பெண் பணியாளர் ஒருவர், போலீசில் நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், கவர்னர் ஆனந்த போஸ் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்த தகவல் வெளியானதும், திரிணமுல் காங்.,கை சேர்ந்த மாநில நிதித்துறை இணையமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா கூறுகையில், ''பிரதமர் நரேந்திர மோடி கவர்னர் மாளிகையில் வந்து இரவு தங்க உள்ள நாளில் அங்கு நடக்கும் சம்பவங்கள் வியப்பாக உள்ளன,'' என, தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள கவர்னர் ஆனந்த போஸ், ''கட்டுக்கதைகளால் என்னை அச்சுறுத்த முடியாது. என்னை அவமானப்படுத்தி தேர்தலில் பலன் அடைய நினைப்பவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். உண்மை வெல்லும்.

''எத்தனை வழக்கு வேண்டுமானாலும் பதியட்டும்; சட்டப்படி சந்திக்க தயார்,'' என, தெரிவித்தார்.

இந்நிலையில், கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கை:

கவர்னருக்கு எதிராக அவதுாறு மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரான குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து, மாநில நிதித்துறை இணை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா மற்றும் மாநில போலீசார் கவர்னர் மாளிகைக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கவர்னர் பங்கேற்க மாட்டார். அமைச்சருக்கு எதிரான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை குறித்து அட்டர்னி ஜெனரலுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கவர்னர் மாளிகையில் பணியாற்றிய இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பெண் கண்ணீர் வடிப்பதை பார்த்து, என் இதயமே உடைந்து விட்டது. சந்தேஷ்காலி கலவரம் பற்றி அலறும் பா.ஜ.,வினர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர். நேற்று முன்தினம் மேற்கு வங்கத்துக்கு வந்த பிரதமர், இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்?

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்

கேள்விக்கு என்ன பதில்?








      Dinamalar
      Follow us