sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்., போராட்டங்களில் பிரதீப் ஈஸ்வர் 'ஆப்சென்ட்'

/

காங்., போராட்டங்களில் பிரதீப் ஈஸ்வர் 'ஆப்சென்ட்'

காங்., போராட்டங்களில் பிரதீப் ஈஸ்வர் 'ஆப்சென்ட்'

காங்., போராட்டங்களில் பிரதீப் ஈஸ்வர் 'ஆப்சென்ட்'


ADDED : ஆக 20, 2024 11:43 PM

Google News

ADDED : ஆக 20, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்பல்லாப்பூர் : சிக்கபல்லாப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், 39. கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்றார்.

எம்.எல்.ஏ., ஆன பின், தங்களை மதிப்பதில்லை என, சிக்கபல்லாப்பூர் மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரதீப் ஈஸ்வர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர். மாநில தலைவர் சிவகுமாரிடம், பிரதீப் ஈஸ்வர் மீது புகார் கூறினர்.

தற்போது அவர் மீது மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது. அதாவது எம்.எல்.ஏ., ஆன பின், கட்சி சார்பில் நடக்கும் போராட்டங்களில் பிரதீப் ஈஸ்வர் பங்கேற்பது இல்லை.

முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர, கவர்னர் உத்தரவிட்டதை கண்டித்து, மாநில முழுதும் நேற்று முன்தினம் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.

சிக்கபல்லாப்பூரில் நடந்த போராட்டத்திலும் பிரதீப் ஈஸ்வர் பங்கேற்கவில்லை. இதை கவனித்த அவரது எதிர்கோஷ்டியினர், ஈஸ்வர் மீது மீண்டும் புகார் பட்டியல் வாசித்துள்ளனர்.

தொண்டர்களும் எரிச்சல் அடைந்துள்ளனர். போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு அவர் விளக்கமும் அளிக்கவில்லை.






      Dinamalar
      Follow us