மத்திய அமைச்சர் குமாரசாமி குடும்பத்தினருடன் பிரார்த்தனை
மத்திய அமைச்சர் குமாரசாமி குடும்பத்தினருடன் பிரார்த்தனை
ADDED : செப் 08, 2024 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிடதி: மத்திய கனரக தொழிற் துறை அமைச்சர் குமாரசாமி, ராம்நகர், பிடதியின், கேதகானஹள்ளியில் உள்ள பண்ணை வீட்டுக்கு வருகை தந்தார். மனைவி அனிதா, மகன் நிகில், மருமகள், பேரன் என, குடும்பத்தினருடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்.
பெங்களூரின், ஜே.பி., நகர் இல்லத்திலும் விநாயகருக்கு பூஜைகள் நடந்தன. மாநில மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக் கூறினர். 'முழு முதற் கடவுள் விநாயகர், நாட்டு மக்களின் கஷ்டங்களை போக்கி, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சியை அளிக்க வேண்டும்' என, விநாயகரிடம் குமாரசாமி வேண்டினார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், 'எக்ஸ்' வலை தளம் மூலமாக, மாநில மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறினார்.