sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனைவியை வீட்டுக்கு அனுப்பாத மாமனாரை கண்டித்து போராட்டம்

/

மனைவியை வீட்டுக்கு அனுப்பாத மாமனாரை கண்டித்து போராட்டம்

மனைவியை வீட்டுக்கு அனுப்பாத மாமனாரை கண்டித்து போராட்டம்

மனைவியை வீட்டுக்கு அனுப்பாத மாமனாரை கண்டித்து போராட்டம்


ADDED : ஆக 05, 2024 12:59 AM

Google News

ADDED : ஆக 05, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயவாடா: ஆந்திராவில், மனைவியரை வீட்டுக்கு அனுப்பாத மாமனாரை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் முன், மருமகன்கள் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆந்திர மாநிலம் ஏலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீனிவாச ராமானுஜர். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகளை, குஜராத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், இளைய மகளை, விஜயவாடாவைச் சேர்ந்த நபருக்கும் திருமணம் செய்து வைத்தார்.

இரு மகள்களுக்கும் குழந்தைகள் உள்ளனர்.கடந்த 10 மாதங்களுக்கு முன், இரு மகள்களும் பெற்றோர் வீட்டிற்கு வந்தனர்.

அப்போது, தங்களது கணவர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும், கவனித்துக் கொள்ளும் விதம் குறித்தும் அவர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த சீனிவாச ராமானுஜர், இரு மகள்களையும் அவர்களது கணவர்களின் வீட்டிற்கு அனுப்ப மறுப்பு தெரிவித்தார்.

இதையறிந்த இரு மருமகன்களும், மனைவியரை தங்கள் வீட்டுக்கு அனுப்பும்படி பல முறை மாமனாரிடம் கெஞ்சினர். எனினும், மகள்களை அனுப்ப முடியாது என, சீனிவாச ராமானுஜர் திட்ட வட்டமாக தெரிவித்தார்.

இதனால் செய்வதறியாது திகைத்த இரு மருமகன்களும், ஏலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு சமீபத்தில் வந்தனர்.

பின், திடீரென கலெக்டர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து, தங்களது மனைவியரை சேர்த்து வைக்க வேண்டும் என முழக்கமிட்டபடி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us