sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேசிய தேர்வு முகமை ஆபீசில் நுழைந்து காங்., மாணவர் அமைப்பினர் போராட்டம்

/

தேசிய தேர்வு முகமை ஆபீசில் நுழைந்து காங்., மாணவர் அமைப்பினர் போராட்டம்

தேசிய தேர்வு முகமை ஆபீசில் நுழைந்து காங்., மாணவர் அமைப்பினர் போராட்டம்

தேசிய தேர்வு முகமை ஆபீசில் நுழைந்து காங்., மாணவர் அமைப்பினர் போராட்டம்


ADDED : ஜூன் 28, 2024 01:41 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'நீட்' தேர்வு முறைகேடுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர், டில்லியில் உள்ள என்.டி.ஏ., அலுவலகத்திற்குள் அதிரடியாக புகுந்து, உள்பக்கம் பூட்டு போட்டு கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வின் வினாத்தாள், தேர்வுக்கு முன் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பீஹார், மஹாராஷ்டிரா மற்றும் டில்லியில் சிலரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கு சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த முறைகேடுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், டில்லியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பார்லிமென்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உரையாற்ற வந்தபோது, காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து, நீட் தேர்வுகளை நடத்தும் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமையின் டில்லி அலுவலகத்தை நோக்கி, காங்., மாணவர் அமைப்பான, இந்திய தேசிய மாணவர் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.

அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்த அவர்கள், என்.டி.ஏ.,வுக்கு எதிரான சுவரொட்டிகளை அப்பகுதி முழுதும் ஒட்டினர். அலுவலகத்தை உள்பக்கமாக பூட்டிவிட்டு, என்.டி.ஏ., அலுவலகத்தை மூடும்படி கோஷமிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சில நிமிடங்கள் அந்த அலுவலகமே மாணவர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்றது. போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பை தீவிரப்படுத்தினர்.

பீஹாரில் இருவர் கைது

நீட் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ., விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த வழக்கில், பீஹாரின் பாட்னாவில் மணீஷ் குமார் மற்றும் அசுதோஷ் என்ற இருவரை நேற்று கைது செய்தது. தேர்வுக்கு முன்னதாக, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு அங்கு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. அங்கு வைத்தே அவர்கள் விடைகளை மனப்பாடம் செய்துள்ளனர். இதற்காக மாணவர்களை அழைத்து செல்லும் பணியை மணீஷ் குமார் செய்ததாக கூறப்படுகிறது.மற்றொரு குற்றவாளியான அசுதோஷ், மாணவர்கள் தங்க வசதி செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.








      Dinamalar
      Follow us