sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தவறு செய்தால் தண்டனை பா.ஜ., நாகராஜ் உறுதி

/

தவறு செய்தால் தண்டனை பா.ஜ., நாகராஜ் உறுதி

தவறு செய்தால் தண்டனை பா.ஜ., நாகராஜ் உறுதி

தவறு செய்தால் தண்டனை பா.ஜ., நாகராஜ் உறுதி


ADDED : ஆக 12, 2024 07:23 AM

Google News

ADDED : ஆக 12, 2024 07:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''தவறு செய்தோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். முதல்வரை ராஜினாமா செய்ய சொல்ல, எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உள்ளது,'' என்று, பா.ஜ., - எம்.எல்.சி., நாகராஜ் கூறி உள்ளார்.

பா.ஜ., - எம்.எல்.சி., நாகராஜ் கோலாரில் நேற்று அளித்த பேட்டி:

வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு, மூடா முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவை, எதிர்க்கட்சிகள் குறி வைக்கவில்லை. முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ., - எம்.எல்.சி., என, யாராக இருந்தாலும், தவறு செய்தால் தண்டிக்கப்பட வேண்டும். யார் ஊழல் செய்தாலும் தவறு தான். முதல்வரை ராஜினாமா செய்ய சொல்ல, எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உள்ளது.

மக்களுக்கு சேவை செய்ய, அரசியலை பயன்படுத்த வேண்டும். பணம் சம்பாதிக்க இல்லை. மக்கள் வரி பணத்தை தவறாக பயன்படுத்த கூடாது. எஸ்.ஐ.டி., - சி.ஐ.டி., - சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள், பாரபட்சமின்றி விசாரணை நடத்தி தவறு செய்தவர்களுக்கு, தண்டனை பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரசில் இருந்த போது, சித்தராமையாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார் நாகராஜ். தற்போது அவருக்கு எதிராக பேசி வருகிறார்.






      Dinamalar
      Follow us