sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'வீலிங்' செய்ததால் ஆத்திரம்; மேம்பாலத்தில் இருந்து வீசப்பட்ட 2 பைக்

/

'வீலிங்' செய்ததால் ஆத்திரம்; மேம்பாலத்தில் இருந்து வீசப்பட்ட 2 பைக்

'வீலிங்' செய்ததால் ஆத்திரம்; மேம்பாலத்தில் இருந்து வீசப்பட்ட 2 பைக்

'வீலிங்' செய்ததால் ஆத்திரம்; மேம்பாலத்தில் இருந்து வீசப்பட்ட 2 பைக்


ADDED : ஆக 18, 2024 11:24 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : ரோட்டில் வீலிங் செய்து தொந்தரவு கொடுத்ததால், கோபமடைந்த மற்ற வாகன ஓட்டிகள், இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல், மேம்பாலத்தில் இருந்து கீழே வீசினர்.

பெங்களூரின் மேம்பாலங்களில் இளைஞர்கள், இரு சக்கர வாகனங்களில் அபாயகரமாக வீலிங் செய்து, மற்ற வாகன பயணியருக்கு தொந்தரவு கொடுக்கின்றனர்.

வீலிங் செய்வோரை கட்டுப்படுத்த, போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளனர். வாகனங்களையும் பறிமுதல் செய்கின்றனர். ஆனால் வீலிங் செய்வது நிற்கவில்லை.

கெம்பே கவுடா சர்வதேச விமான நிலைய ரோட்டில், நேற்று முன் தினம் வீலிங் செய்த 44 இளைஞர்கள், எலஹங்கா போலீசாரிடம் சிக்கினர். இவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் காலை, பெங்களூரு - துமகூரு தேசிய நெடுஞ்சாலையின், அடகமாரனஹள்ளி மேம்பாலம் அருகில், வீலிங் செய்த இளைஞர் ஒருவர், அதே ரோட்டில் சென்ற வாகனம் மீது மோதினார். இதே ரோட்டில் வேறொரு இளைஞரும் வீலிங் செய்தபடி சென்றார்.

இதை கண்டு கோபமடைந்த வாகன ஓட்டிகள், வீலிங் செய்த இளைஞர்களின் இரண்டு இரு சக்கர வாகனங்களை பறித்து, மேம்பாலத்தில் இருந்து கீழே வீசினர்.

இந்த காட்சியை அவ்வழியாக சென்ற ஒருவர், தன் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.






      Dinamalar
      Follow us