sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கிழக்கு ஆப்கனில் மழை 40 பேர் பலி

/

கிழக்கு ஆப்கனில் மழை 40 பேர் பலி

கிழக்கு ஆப்கனில் மழை 40 பேர் பலி

கிழக்கு ஆப்கனில் மழை 40 பேர் பலி


ADDED : ஜூலை 17, 2024 01:18 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத், கிழக்கு ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால், 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முக்கிய நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்த விபத்தில், 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய ஆசியா மற்றும் தெற்காசியாவிற்கு நடுவில் உள்ள கிழக்கு ஆப்கானிஸ்தானில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வீடுகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

இதுவரை, புயலில் சிக்கி 40 பேர் உயிர்இழந்துள்ளனர் மற்றும் 347 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

நங்கர்ஹர் நகரில், 400 வீடுகள் சேதம் அடைந்துள்ளது மற்றும் 60 மின்கம்பங்கள் அறுந்து விழுந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜலாலாபாத் நகரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், சேதம் குறித்து மதிப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வடக்கு பாக்லான் மாகாணத்தில், காபூல் மற்றும் பால்க்கை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையில், பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 34 பேர் காயம் அடைந்துள்ளனர். கனமழையால் சாலையில் ஏற்பட்ட பள்ளம் காரணமாக விபத்து நடந்ததா, இல்லை வேறு ஏதும் காரணமா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us