sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாய்களுக்கு எலி காய்ச்சல் கால்நடை டாக்டர் எச்சரிக்கை

/

நாய்களுக்கு எலி காய்ச்சல் கால்நடை டாக்டர் எச்சரிக்கை

நாய்களுக்கு எலி காய்ச்சல் கால்நடை டாக்டர் எச்சரிக்கை

நாய்களுக்கு எலி காய்ச்சல் கால்நடை டாக்டர் எச்சரிக்கை


ADDED : மே 29, 2024 04:56 AM

Google News

ADDED : மே 29, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : 'நாய் வளர்ப்போர் கவனமாக இருப்பது நல்லது. விலங்குகள் மீது அளவுக்கு அதிகமாக அன்பு காண்பிப்பது, ஆபத்தில் முடியும்' என, கால்நடை வல்லுனர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து கால்நடை டாக்டர் மோகன் கூறியதாவது:

பெங்களூரில் நாய் வளர்ப்போர், நாய் ஆர்வலர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். சில நாட்களாக நாய்களுக்கு எலிக்காய்ச்சல் அதிகரிக்கிறது. இக்காய்ச்சல் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

பெங்களூரில் சமீப ஆண்டுகளாக நாய்கள், பூனைகள் வளர்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த விலங்குகளிடம் நோய்களும் அதிகரிக்கின்றன. இதற்கு முன்பு எலிகள் மூலமாக, எலிக் காய்ச்சல் பரவியது. ஆனால் இப்போது எலிகளிடம் இருந்து நாய்களுக்கும், நாய்களிடம் இருந்து மனிதர்களுக்கும் காய்ச்சல் பரவுகிறது.

எலிக்காய்ச்சல் பரவினால், விலங்குகளுக்கு மட்டுமே தடுப்பூசி உள்ளது. ஆனால் மனிதர்களுக்கு எந்த தடுப்பூசியும் இல்லை. இந்த காய்ச்சலை அலட்சியமாக நினைக்கக் கூடாது.

நாய்களுடன் 'வாக்கிங்' செல்லும்போது, அவற்றை விளையாட விடும்போது கவனமாக இருக்க வேண்டும். எலிகளின் சிறுநீர் மீது நடந்தால், காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. நாய்களை வாக்கிங் அழைத்துச் சென்று வந்தவுடன், குளிக்க வைக்க வேண்டும்.

அறிகுறிகள்


l நாய்களுக்கு அதிகமான காய்ச்சல் இருப்பது

l இவற்றின் கண்கள் மஞ்சளாக இருக்கும்

l நாய்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

l மஞ்சள் காமாலை

l காய்ச்சலின் அளவு 104/ 114 டிகிரி எட்டுவது

l நாய்களின் செயல்திறன் குறைவது

முன்னெச்சரிக்கை


l வாக்கிங் அழைத்துச் செல்லும்போது, விழிப்புடன் இருக்க வேண்டும்

l தினமும் குளிப்பாட்ட வேண்டும்

l எலிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போடுவது

l வெளியில் இருந்து வந்த நாய்களிடம் இருந்து, சிறார்களை தள்ளிவைக்க வேண்டும்

l நாய் தின்று மிச்சம் வைத்த உணவை, வெளியே எறிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us