sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நடை பாதையில் பெயர் பலகைகள் அகற்றம்

/

நடை பாதையில் பெயர் பலகைகள் அகற்றம்

நடை பாதையில் பெயர் பலகைகள் அகற்றம்

நடை பாதையில் பெயர் பலகைகள் அகற்றம்


ADDED : ஜூலை 16, 2024 05:03 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : நடைபாதைகளை ஆக்ரமித்து, கடைக்காரர்கள் பொருத்திய பெயர்ப்பலகைகளை, போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து, அறிவிப்பு பலகைகள் பொருத்தியிருந்தனர். இதனால் பொது மக்களின் நடமாட்டத்துக்கு, பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து புகார் வந்தது. இவற்றை அகற்றும்படி, பலமுறை போலீசார் உத்தரவிட்டும் பலனில்லை. எனவே பெங்களூரு கிழக்கு மண்டல போக்குவரத்து போலீசார், நடவடிக்கையில் இறங்கினர்.

தொம்மலுார் சாலை, ஹலசூரு பிரதான சாலை, இந்திரா நகரின் 100 அடி சாலை, பழைய மெட்ராஸ் சாலை, எம்.எம்.சாலை, ஆயில்மில் சாலை, செையின்ட் ஜான்ஸ் சாலை, கோவிந்தபுரா பிரதான சாலை, ராமமூர்த்தி நகர், பனத்துார் பிரதான சாலை, காடுகோடி பிரதான சாலை, ஐ.டி.பி.எல்., பிரதான சாலைகளில், நேற்று பெயர்ப்பலகைகளை அகற்றினர். சுமூகமான போக்குவரத்துக்கு வழி வகுத்தனர்.

கிழக்கு போக்குவரத்து பிரிவு டி.சி.பி., குல்தீப் குமார் ஜெயின் கூறியதாவது:

பலமுறை உத்தரவிட்டும், கடைக்காரர்கள் நடைபாதைகளில் பொருத்திய பெயர்ப்பலகைகளை அகற்றவில்லை. விதிமுறைகளை மீறிய கடைக்காரர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us