sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விசைப்படகுகள் மோதல் ஐந்து மீனவர்கள் மீட்பு

/

விசைப்படகுகள் மோதல் ஐந்து மீனவர்கள் மீட்பு

விசைப்படகுகள் மோதல் ஐந்து மீனவர்கள் மீட்பு

விசைப்படகுகள் மோதல் ஐந்து மீனவர்கள் மீட்பு


ADDED : மே 20, 2024 05:28 AM

Google News

ADDED : மே 20, 2024 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுப்பி : உடுப்பியில் இரு விசைப்படகுகள் மோதியதில் ஒரு படகு கடலில் மூழ்கியது. அதில் இருந்த ஐந்து மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

உடுப்பி மாவட்டம், வடமண்டேஸ்வராவை சேர்ந்தவர் கோபால சுவர்ணா. இவருக்கு சொந்தமாக 'மல்டிதேவி 11' என்ற விசைப்படகு உள்ளது. கடந்த 16ம் தேதி ஐந்து மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

மறுநாள் 17ம் தேதி, மோசமான வானிலை நிலவியது. முன்னால் இருக்கும் பொருட்கள் தெரியாத அளவில் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது. இதனால், கடலில் 'துர்கா' என்ற மற்றொரு விசைப்படகுடன் மோதியது.

இதில், 'மல்டிதேவி 11' விசைப்படகில் ஓட்டை ஏற்பட்டது. கடல் நீர் உள்ளே புகுந்தது.

இதில் இருந்த மீனவர்கள் தண்டேலா சுரேஷ் குந்தர், கலசிஸ் சங்கர் குந்தர், சங்கரா பூஜாரி, யோகேந்திரா, அப்துல் கானில ஷேக் ஆகியோரை, 'துர்கா' படகில் இருந்த மீனவர்கள் மீட்டனர்.

'மல்டிதேவி 11' படகை கயிறு கட்டி, இழுத்து வந்தனர். ஆனால், படகு 90 சதவீதம் நீரில் மூழ்கியதால், கயிறு அறுந்தது. இதனால், 'மல்டிதேவி 11'படகு, கடலில் மூழ்கியது. 2,500 லிட்டர் டீசல் கடல் தண்ணீரில் கலந்தது. இதனால், 20 லட்சம் ரூபாய் சேதம் ஏற்பட்டது' என மீனவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us