sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குற்றவாளிகளை துாக்கில் போடணும்: கெடு விதித்தார் மம்தா

/

குற்றவாளிகளை துாக்கில் போடணும்: கெடு விதித்தார் மம்தா

குற்றவாளிகளை துாக்கில் போடணும்: கெடு விதித்தார் மம்தா

குற்றவாளிகளை துாக்கில் போடணும்: கெடு விதித்தார் மம்தா

38


ADDED : ஆக 17, 2024 09:24 AM

Google News

ADDED : ஆக 17, 2024 09:24 AM

38


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கெடு விதித்தார்.

மேற்குவங்கம், கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மம்தா பானர்ஜி பிரமாண்ட பேரணி நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது: கோல்கட்டா சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இதன் மூலம் உண்மையை மறைக்க முயற்சிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தச் சம்பவத்தில் உண்மை வெளியே வர வேண்டும். குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்.

வங்கதேச பாணி

நாளைக்குள் சி.பி.ஐ., விசாரணையை நடத்தி முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இடதுசாரி மற்றும் பா.ஜ.,வினர் மேற்கு வங்கத்தில் வங்கதேச பாணியில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

அம்பலப்படுத்தணும்

மருத்துவ கல்லூரியை பா.ஜ.,வினர் தான் அடித்து நொறுக்கினார்கள் என்பது எனக்கு தெரியும். பா.ஜ.,வினர் தேசிய கொடியுடன் அங்கு சென்றுள்ளார்கள். அவர்கள் தேசியக் கொடியை அவமதித்துவிட்டார்கள். இந்த விவகாரத்தில் பா.ஜ.,வினருக்கு உள்ள தொடர்பை நிச்சயம் அம்பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us