sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.30 கோடி போதை பொருள் பறிமுதல்

/

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.30 கோடி போதை பொருள் பறிமுதல்

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.30 கோடி போதை பொருள் பறிமுதல்

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.30 கோடி போதை பொருள் பறிமுதல்


ADDED : ஜூலை 14, 2024 05:20 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, : பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், கென்யா நாட்டு பிரஜையை கைது செய்த அதிகாரிகள், 30 கோடி ரூபாய் மதிப்புள்ள 'கொகைன்' என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு, 'இன்டிகோ' விமானத்தில், மேற்கு ஆசிய நாடான தோகாவில் இருந்து, ஆப்பிரிக்க நாடான கென்யாவை சேர்ந்த பிரஜை ஒருவர் வந்திறங்கினார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் இருந்தது. அவரை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள், அவரின் பையை பரிசோதித்தனர். வெள்ளை நிறத்தில் பவுடர் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை பரிசோதித்தபோது, கொகைன் என்பது தெரியவந்தது. இதன் மதிப்பு 30 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. கென்யா பிரஜை மீது, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபோன்று, ஜூலை 5ம் தேதி பாங்காக்கில் இருந்து வந்த இரண்டு பெண் பயணியரிடம், 3.2 கிலோ 'ஹைட்ரோலிக்' என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு மூன்று கோடி ரூபாய்.






      Dinamalar
      Follow us