ADDED : மார் 08, 2025 02:16 AM
மாநிலத்தில் 2024 - 29 சுற்றுலா கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 8,000 கோடி ரூபாய் முதலீடு கிடைத்து, 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.
சவதத்தியின் ரேணுகா எல்லம்மா கோவில், பெங்களூரின் தேவிகா ராணி எஸ்டேட் 199 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
பத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்களின் மேம்பாட்டுக்கு 50 கோடி ரூபாய்.
தட்சிணகன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களில் கடற்கரைகள், சாலைகள் மேம்படுத்தப்படும்.
யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்பட்ட பேலுார், ஹளேபீடு, சோமநாநபுரா சுற்றுலா தலங்களில், அடிப்படை வசதிகள் செய்யப்படும்.
சுற்றுலா பயணியரின் பாதுகாப்புக்காக, சுற்றுலா தலங்களில் பணியாற்றும் 'சுற்றுலா நண்பர்' களுக்கு பயிற்சி அளிக்கப்படும். சுற்றுலா பயணியர் வசதிக்காக தினமும் 24 மணி நேரம் செயல்படும் 'சுற்றுலா சஹாய வாணி' துவக்கப்படும்.
நினைவிடங்களை பாதுகாக்க, தேவையான அடிப்படை வசதிகள் செய்ய, 'நமது நினைவிடம்' திட்டத்தின் கீழ், நினைவிடங்கள் தத்து கொடுக்கப்படுகின்றன.
சுற்றுலா தலங்களின், அனைத்து தகவல்களை சேகரிக்க, ONE - TAC Digital தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
வரலாற்று பிரசித்தி பெற்ற லக்ஹுன்டியின், புராதன கோவில்களை, உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் சேர்க்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மைசூரு நகரின், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் வளாகத்தில், மாநில கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.