sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மவுனம் ராகவேந்திரா, ஈஸ்வரப்பா பங்கேற்பு

/

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மவுனம் ராகவேந்திரா, ஈஸ்வரப்பா பங்கேற்பு

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மவுனம் ராகவேந்திரா, ஈஸ்வரப்பா பங்கேற்பு

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மவுனம் ராகவேந்திரா, ஈஸ்வரப்பா பங்கேற்பு


ADDED : ஏப் 09, 2024 09:56 PM

Google News

ADDED : ஏப் 09, 2024 09:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொகா: ஆர்.எஸ்.எஸ்., ஏற்பாடு செய்திருந்த யுகாதி நிகழ்ச்சியில் பங்கேற்றும், பா.ஜ., - எம்.பி., ராகவேந்திரா, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆகியோர் பேசிக் கொள்ளவில்லை.

லோக்சபா தேர்தலில் தனது மகனுக்கு சீட் கிடைக்காத கோபத்தில் உள்ள ஈஸ்வரப்பா, ராகவேந்திராவை எதிர்த்து ஷிவமொகாவில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நேற்று நகரில் யுகாதி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, ஆர்.எஸ்.எஸ்., தொப்பி, வெள்ளை நிற சட்டை, சாதாரண பேன்ட் மட்டும் அணிந்திருந்தாரே தவிர, காக்கி பேன்ட் அணியவில்லை.

அதேவேளையில், எம்.பி., ராகவேந்திரா, ஆர்.எஸ்.எஸ்.,சின் முழு சீருடையுடன் பங்கேற்றார். விழா மேடையில், வலது புறத்தில் ஈஸ்வரப்பாவும், இடது புறத்தில் ராகவேந்திராவும் அமர்ந்திருந்தனர். அப்போதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

பின், ஈஸ்வரப்பா கூறுகையில், ''யுகாதி பண்டிகை ஹிந்துக்களை இணைக்கும் பண்டிகை. ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் இந்நிகழ்ச்சிக்கு நானாக விரும்பி வந்தேன்,'' என்றார்.

ராகவேந்திரா கூறுகையில், ''எம்.பி.,யாகவோ, கவுன்சிலராகவோ, பா.ஜ., வேட்பாளராகவோ இங்கு வரவில்லை. சாதாரண ஆர்.எஸ்.எஸ்., தொண்டனாக பங்கேற்க வந்தேன். மாநிலத்தில் நடக்கும் முக்கிய பண்டிகைகளில் இதுவும் ஒன்று,'' என்றார்.

யுகாதி பண்டிகையில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களுடன் பா.ஜ., - எம்.பி., ராகவேந்திரா பேசிக் கொண்டிருந்தார். இடம்: ஷிவமொகா.






      Dinamalar
      Follow us