sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராகுல் பெயரை சொன்னால் ஓட்டு கிடைக்காது: ரவி

/

ராகுல் பெயரை சொன்னால் ஓட்டு கிடைக்காது: ரவி

ராகுல் பெயரை சொன்னால் ஓட்டு கிடைக்காது: ரவி

ராகுல் பெயரை சொன்னால் ஓட்டு கிடைக்காது: ரவி


ADDED : ஏப் 17, 2024 06:18 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயபுரா, : ''ராகுல் பெயரை பயன்படுத்துவதால், காங்கிரசுக்கு ஓட்டுகள் கிடைக்காது,'' என பா.ஜ., மூத்த தலைவர் சி,டி.ரவி தெரிவித்தார்.

விஜயபுராவில் நேற்று அவர் கூறியதாவது:

ஹிந்துக்களுக்கு செல்வாக்குள்ள பகுதிகளில், காங்கிரசுக்கு ஆதரவு கிடைக்காது. வரும் நாட்களில் இக்கட்சியினர் பாகிஸ்தானில், ஆதரவு தேடுவதை தவிர வேறு வழியில்லை. இதை மனதில் கொண்டு, அவர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுகின்றனர்.

அமேதி தொகுதியில் வெற்றி பெற முடியாத காங்கிரசின் ராகுல், முஸ்லிம்கள் அதிகம் உள்ள கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.

ராகுல் பெயரை பயன்படுத்துவதால், தன் வேட்பாளருக்கு கிடைக்கும் ஓட்டுகளை காங்கிரஸ் இழக்கிறது. இவர்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. பா.ஜ.,வை போன்று பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, முதலில் காங்கிரஸ் கூறட்டும்.

நபரை விட கட்சியே முக்கியம்; கட்சியை விட நாட்டின் நலன் முக்கியம். அதிருப்தியாளர்கள் விரைவில் சமாதானம் செய்யப்படுவர். மைசூரில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேசும் போது, மகளிர் காங்கிரஸ் தொண்டர்கள் கோஷமிட்டுள்ளனர். தேவகவுடாவின் கர்ஜனையை கேட்ட காங்கிரஸ், பெண்களை ஏவி விட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us