sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

15 ஆயிரம் தொழிலாளர்களை உடனே அனுப்பிவையுங்க : இந்தியாவிடம் இஸ்ரேல் கேட்பது எதற்கு தெரியுமா ?

/

15 ஆயிரம் தொழிலாளர்களை உடனே அனுப்பிவையுங்க : இந்தியாவிடம் இஸ்ரேல் கேட்பது எதற்கு தெரியுமா ?

15 ஆயிரம் தொழிலாளர்களை உடனே அனுப்பிவையுங்க : இந்தியாவிடம் இஸ்ரேல் கேட்பது எதற்கு தெரியுமா ?

15 ஆயிரம் தொழிலாளர்களை உடனே அனுப்பிவையுங்க : இந்தியாவிடம் இஸ்ரேல் கேட்பது எதற்கு தெரியுமா ?

20


ADDED : செப் 10, 2024 10:24 PM

Google News

ADDED : செப் 10, 2024 10:24 PM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : இஸ்ரேல் நாட்டின் கட்டுமான பணி்க்கு 10 ஆயிரம் பேர்களும் பராமரிப்பு பணிகளுக்கு 5 ஆயிரம் பேர் இந்தியர்கள் தேவைப்படுகி்ன்றனர். என இந்தியாவிடம் இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

இஸ்ரேல்நாட்டின் மக்கள் தொகை, குடியேற்றம் மற்றும் எல்லை ஆணையம் (பிஐபிஏ) விடுத்த கோரிக்கையில் கட்டுமான பிரிவில் பணிசெய்வதற்காக 10 ஆயிரம் பேரும், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பணி செய்வதற்கு 5 ஆயிரம் பேரும் தேவைப்படுகின்றனர். இவர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரி உள்ளது.

இதற்கான குறைந்த பட்ச கல்வித்தகுதியாக குறைந்தது 10 ஆம் வகுப்பை முடித்தவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றவர்கள் மற்றும் குறைந்தபட்சம் வேலை பயிற்சியுடன் கூடிய பராமரிப்புப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தற்போது நடைபெற உள்ள இரண்டாவது சுற்று மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளது. இதற்காக பிஐபிஏ குழு விரைவில் இந்தியாவிற்கு வருகை தர உள்ளது.

முன்னதாக நடந்த முதல் சுற்றில், 16,832 பேர்கள் அந்தந்த டிரேடுகளில் திறன் தேர்வுகளுக்குத் தோன்றினர், அவர்களில் 10,349 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மருத்துவக் காப்பீடு, உணவு, தங்குமிடம் ஆகியவற்றுடன் மாதம் ரூ.1.92 லட்சம் சம்பளம் கிடைக்கும் என தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us