sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிவன் மூலமந்திரம்

/

சிவன் மூலமந்திரம்

சிவன் மூலமந்திரம்

சிவன் மூலமந்திரம்


ADDED : பிப் 25, 2025 08:08 PM

Google News

ADDED : பிப் 25, 2025 08:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவ சிவ என்கிலர் தீவினை யாளர்

சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்

சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்

சிவ சிவ என்னச் சிவகதி தானே!

திருமூலர் அருளிய இந்த மந்திரமானது சிவன் மூலமந்திரமாக போற்றப்படுகிறது. நீண்டகால துன்பம் உடையவர்கள், கட்டுக்கடங்காத பண பிரச்சனை உடையவர்கள், தீராத நோய் உடையவர்கள், மன நிம்மதி இன்றி தவிப்பவர்கள் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர தீராத பிரச்சனைகள் யாவும் விரைவில் தீரும். தினமும் மந்திரத்தை ஜபிக்க இயலாதவர்கள் திங்கட்கிழமையில் ஜபிப்பது அவசியம்.

மும்மூர்த்திகளில் சிவபெருமானிடம் இருந்து மட்டுமே வரங்களை எளிதில் பெற முடியும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். எவர் ஒருவர் சிவபெருமானை மனமுருகி பிராத்தனை செய்து வழிபட்டாலும் அவரது பிரச்சனைகளை சிவபெருமான் எளிதில் போக்குவார் என்று நம்பப்படுகிறது.

அந்த வகையில் சிவபெருமானை வணங்குகையில் அவருக்குரிய மூல மந்திரம் அதை ஜபிப்பது நம் பிராத்தனைக்கு வலிமை சேர்க்கும்.

சிவன் வழிபாடு


“சிவாய நம என்கிறவர்களுக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை” என்பது தமிழ் சொல் வழக்காகும். தமிழர்களின் முழுமுதல் தெய்வம் சிவபெருமான் ஆவார். நம்மிடம் நிறைந்திருக்கும் அனைத்து வகையான துர்க்குணங்களையும், தீய எண்ணங்களையும், செயல்களையும் போக்கி வாழ்வில் கிடைக்க வேண்டிய நியாயமான இன்பங்கள் கிடைக்கச் செய்து, முக்தி நிலையை அருளச்செய்யும் தெய்வம் சிவன் ஆவார்.
அத்தகைய சிவபெருமானை தமிழ் சித்தர்கள் அனைவருமே முழுமுதற்கடவுளாக கொண்டு வழிபடுகின்றனர். அதில் அற்புதமான தத்துவம் மற்றும் ஞான கருத்துக்கள் நிறைந்த திருமந்திரம் எனும் நூலை இயற்றிய திருமூலர் தமிழ்மொழியில் சிவபெருமானுக்குரிய மூல மந்திரத்தை இயற்றியுள்ளார்.



சிவன் வழிபாட்டிற்குரிய தினங்கள்


சிவபெருமானை அனைத்து தினங்களிலும் வழிபடலாம் என்றாலும் சிவனுக்கு மிகவும் விருப்பமான திங்கட்கிழமைகள், மாத சிவராத்திரி, பிரதோஷ தினங்கள் போன்ற நாட்களில் காலை முதல் மாலை வரை சிவ மூலமந்திரத்தை உங்களால் எத்தனை எண்ணிக்கையில் துதித்து வழிபட முடிந்தாலும் அந்த அளவு சிவனின் முழுமையான அருள் உங்களுக்கு கிடைக்கப் பெறும்.



சிவன் மூல மந்திரம் பலன்கள்

• சிவனின் மூல மந்திரத்தை உச்சரித்து வழிபடுபவர்களுக்கு தீவினைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஏற்படும்.
• பித்ரு தோஷங்கள் நீங்கும்.
• குல சாபங்கள், பூர்வ ஜென்ம பாவ வினைகள் நீங்கப் பெறுவார்கள்.
• வீட்டில் பணமுடைகள் நீங்கி செல்வம் பெருகும்.
• நோய்கள் அனைத்தும் விரைவில் தீரும்.
• உடல் நலமும் சிந்தனைத் தெளிவும் உண்டாகும்.
• எதிரிகளால் எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் காக்கும்.
• திருமணம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டும்.



சிவ மந்திரம் (தமிழ்)


நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
பஞ்சாக்ஷர சிவ மூல மந்திரம் :'ஓம் நம சிவாய'இந்த மந்திரம் நமது அறியாமை இருளை அகற்றி நமக்கு ஞானமும் முக்தியும் அளிக்கும்.



சிவ காயத்ரி மந்திரம் 1


ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

சிவ காயத்ரி மந்திரம் 2


ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்



பிரதோஷ மந்திரம்


ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவேஅம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹஇந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் சகல வளங்களும் கிட்டும்.



தரித்திரம் நீக்கும் மந்திரம் :


ஓம் ருத்ராய ரோகநாஷாயஅகச்சே சஹ் ரம் ஓம் நமஹஇந்த மந்திரம் ஜெபிப்பதன் மூலம் வறுமை நிலை நீங்கும்.



மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம் :


ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்இந்த மந்திரம் ஜெபிப்பதன் மூலம் மரண பயத்தை வெல்லலாம்.



சிவ தியான மந்திரம்:


'கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம் விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ'இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நமது பாவங்கள் அகலும். ஐம்புலன்களால் நாம் செய்த பாவங்கள் கரைந்துவிடும்.



ருத்ர மந்திரம்


நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராயமஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாயத்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராயநீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராயஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம.சிங் சிங் சிவாய ஓம்இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் சர்வேஸ்வரனாகிய சிவனின் அருள் நமக்கு எளிதில் கிட்டும்.



சிவன் மூல மந்திரம் (தமிழ்)


சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் தீய வினைகள் அகலும். முக்தி கிட்டும்.








      Dinamalar
      Follow us