sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கிரிமினல் வழக்கு ரத்து கோரி ஐகோர்ட்டில் சிவகுமார் மனு

/

கிரிமினல் வழக்கு ரத்து கோரி ஐகோர்ட்டில் சிவகுமார் மனு

கிரிமினல் வழக்கு ரத்து கோரி ஐகோர்ட்டில் சிவகுமார் மனு

கிரிமினல் வழக்கு ரத்து கோரி ஐகோர்ட்டில் சிவகுமார் மனு


ADDED : ஏப் 23, 2024 11:33 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, : வாக்காளர்களை மிரட்டியதற்காக, தன் பதிவான கிரிமினல் வழக்கை ரத்து செய்யும்படி, துணை முதல்வர் சிவகுமார், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

பெங்களூரு ரூரல் காங்கிரஸ் வேட்பாளராக, துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக, ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், சமீபத்தில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது, 'என் தம்பிக்கு ஓட்டு போடவில்லை என்றால், காவிரி தண்ணீர் வினியோகிக்கப்படாது. இருப்பிட சான்றிதழ் வழங்கப்படாது' என, வாக்காளர்களை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இது தொடர்பாக, பா.ஜ., தரப்பில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், பறக்கும் படையினர், சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பெங்களூரு ஆர்.எம்.சி., யார்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர் மீது கடந்த 20ம் தேதி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவகுமார், நேற்று மனு தாக்கல் செய்தார். விரைவில் இம்மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us