ADDED : ஏப் 02, 2024 10:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : ''லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,'' என, மாநிலடி.ஜி.பி., அலோக் மோகன் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது: மாநிலம் முழுதும் மற்றும் அண்டை மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
பாதுகாப்புப் பணிக்காக மத்தியில் இருந்து, 15 படைகள் வந்துள்ளன. அசம்பாவித சம்பவங்கள் நடக்காதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அனைத்து தொகுதிகளிலும், ரவுடிகள் வீடுகளில் சோதனை நடத்தி, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அரசியல்வாதிகளுடன் இருந்தாலும், அத்தகைய ரவுடிகளுக்கும் சட்டம் ஒன்று தான்.
பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். முன்னெச்சரிக்கையாக சிலர் எல்லையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

