ADDED : ஜூலை 25, 2024 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு நாரங்காப்பற்றை பகுதியைச் சேர்ந்த நவ்ஷாத், உம்முஹபீபா தம்பதி மகள் ஹிபா, 6. நெல்லிப்புழையில் உள்ள, தாருல் நஜாத் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறார். தினமும் பள்ளி பஸ்சில் சென்று வந்த இவர் வழக்கம் போல நேற்று மாலை பள்ளி பஸ்சில் இருந்து இறங்கினார்.
வீட்டிற்கு செல்ல சாலையை கடக்க முயன்ற போது, திடீரென முன்னோக்கி சென்ற பள்ளி பஸ் அவர் மீது மோதியது. இதில், பெற்றோர் கண் முன், சம்பவம் இடத்திலேயே ஹிபா உயிரிழந்தார். பஸ் டிரைவர் அலிஅக்பர், 42, மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.