sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'சூபி' இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது

/

'சூபி' இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது

'சூபி' இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது

'சூபி' இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது


ADDED : பிப் 21, 2025 10:44 PM

Google News

ADDED : பிப் 21, 2025 10:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காட்டை மையமாக கொண்டு செயல்படும், பாடல்களை விரும்புவோரின் 'மெஹில்' அமைப்பு, 12ம் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் மாலை 'சூபி' இசை நிகழ்ச்சியை நடத்தியது.

பாலக்காடு ராப்பாடி கலையரங்கில், தேசிய மனிதநேய மன்றத்தின் ஒத்துழைப்புடன் நடந்த இந்த நிகழ்ச்சியில், புதுடில்லியை மையமாகக் கொண்டுள்ள 'ஷார் யார்' (நான்கு நண்பர்கள்) என்ற 'சூபி' சங்கீத குழுவின் இசைக் கச்சேரி நடந்தது.

மதன் கோபால் ஹார்மோனியம் வாசித்து 'சூபி' பாடல்கள் பாட, தீபக் (கிட்டார், பன்ஜோ), பீரதம் கோஷால் (சரோத்), அம்ஜத்கான் (தபலா) ஆகியோர் பின்னணி வாத்தியங்கள் வாசித்தனர்.

கோழிக்கோடு, பெரிந்தல்மண்ணை, சாவக்காடு ஆகிய இடங்களில் உள்ள இசை நிகழ்ச்சிகளுக்கு பின் 'ஷார் யார்' குழு, பாலக்காட்டில் இசை நிகழ்ச்சி நடத்துவது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியையொட்டி 'மெஹில்' அமைப்பு உறுப்பினர்களின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.






      Dinamalar
      Follow us