தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சித்தராமையாவுக்கு ஆதரவு - எதிர்ப்பு

சித்தராமையாவுக்கு ஆதரவு - எதிர்ப்பு

சித்தராமையாவுக்கு ஆதரவு - எதிர்ப்பு


ADDED : ஆக 17, 2024 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2024 11:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'மூடா' முறைகேடு குறித்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்துவதற்கு,கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று அனுமதி அளித்தது தொடர்பாக, எதிர்ப்பும், ஆதரவும் நிலவுகிறது.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே:

கவர்னர் அளித்துள்ள அனுமதிக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தப்படும். முதல்வர் சித்தராமையா, எந்த காரணத்துக்கும் ராஜினாமா செய்ய மாட்டார். மத்திய பா.ஜ., அரசின் உத்தரவுப்படி, கவர்னர் செயல்படுகிறார்.எந்த அடிப்படையில், முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.,வினர் வலியுறுத்துகின்றனர் என்பது புரியவில்லை. கவர்னர் மூலம், காங்கிரஸ் ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்கின்றனர். நல்லாட்சிக்கு இடையூறு செய்கின்றனர்.கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக, மத்திய விசாரணை அமைப்புகள் மூலம், தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு பா.ஜ., தொந்தரவு கொடுக்கிறது.* துணை முதல்வர் சிவகுமார்:சித்தராமையா எங்கள் முதல்வர். அவர் முதல்வராக நீடிப்பார். எந்த நெருக்கடிக்கும் அடிபணிய மாட்டோம். மக்கள் நலனுக்காக தொடர்ந்து சேவை புரியவோம். காங்கிரஸ் மட்டுமின்றி, ஒட்டு மொத்த 'இண்டியா' கூட்டணி கட்சிகளும் முதல்வருக்கு ஆதரவாக இருக்கின்றன.ராஜ்பவனை பா.ஜ., அலுவலகமாக மாற்றிக் கொண்டுள்ளதை கண்டித்து போராட்டம் நடத்துவோம். ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பை காக்க வேண்டியுள்ளது. முதல்வருக்கு எதிராக சட்டவிரோதமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.நாட்டின் சட்டம், எங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நீதிமன்றம் எங்களுக்கு அநீதி செய்யாது. எனவே சட்டப் போராட்டத்துக்கு தயாராகிறோம்.பிற்படுத்தபட்ட பிரிவைச் சேர்ந்த சித்தராமையா, இரண்டாவது முறையாக முதல்வராகி இருப்பதை, சகித்துக் கொள்ள முடியாமல், பா.ஜ., மேலிடம் சூழ்ச்சி செய்கிறது. வாக்குறுதித் திட்டங்கள் மூலம், 56,000 கோடி ரூபாய் நிதியை, ஏழை மக்களுக்கு செலவு செய்கிறோம்.காங்கிரஸ் ஆட்சியை அகற்ற சூழ்ச்சி நடக்கிறது. எங்கள் ஆட்சியை எந்த காரணத்துக்கும் நீக்க முடியாது. ஒரு கவர்னர் எப்படி செயல்பட வேண்டும் என்பதை, மேற்கு வங்கம், கேரளா, தமிழகம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.முதல்கட்ட விசாரணை கூட நடத்தாமல், முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி அளிப்பது சரியில்லை.



* மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா:

சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு கவர்னருக்கு தெரியும். புகார்தாரர்களிடம் ஆவணங்களை வரவழைத்து பரிசீலனை செய்த பின், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதன் பின்னரே முதல்வர் மீது விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.ஊழல் செய்த முதல்வரை பாதுகாக்க, மாநில அமைச்சர்கள் ஏதேதோ பேசுகின்றனர். முதல்வர் ராஜினாமா செய்துவிட்டு, விசாரணையை சந்திக்க வேண்டும்.* மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா:மூடா முறைகேடு விஷயத்தில், அரசியலமைப்பு படி, கவர்னர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே பிடிவாதத்தை விட்டு விட்டு முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும்.முறைகேட்டில் முதல்வர் ஈடுபட்டுள்ளதற்கான அனைத்து ஆவணங்கள் இருந்தும், அவர் பதவி விலகாமல் பிடிவாதம் பிடித்துள்ளார். வழக்கு விசாரணை பாரபட்சமின்றி நடக்க வேண்டும் என்பதற்காக, இப்போதாவது அவர் ராஜினாமா செய்து, தன் கவுரவத்தை காக்க வேண்டும்.* சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக்:மூடா முறைகேட்டை கண்டித்து, பா.ஜ., - ம.ஜ.த., இணைந்து, பெங்களூரில் இருந்து, மைசூரு வரை பாதயாத்திரை நடத்தப்பட்டது. இந்த பாதயாத்திரையின் பலனாக, முதல்வர் மீது விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.ஒரு தனி நபர் மீது நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. முறைகேடு செய்தவர்களுக்கு, சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம். மனைகள் கேட்டு, மூடாவில் 86,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.சட்டசபையில் ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க அனுமதி அளிக்கவில்லை. முறைகேட்டின் ஒவ்வொரு கட்டத்திலும், சித்தராமையா தலையிட்டுள்ளார். முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்.* மாநில ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி:மூடா முறைகேட்டில் பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும். மைசூரு பாதயாத்திரைக்கு கிடைத்த வெற்றி. சூரியன், சந்திரன் இருப்பது எப்படி சத்தியமோ, அது போன்று முதல்வர் குடும்பம் முறைகேட்டில் ஈடுபட்டதும் சத்தியம்.எனவே வேறு வழியின்றி, தான் முறைகேடு செய்திருப்பதை முதல்வர் ஒப்புகொள்ள வேண்டும். நான் துாய்மையானவன் என்று அடிக்கடி கூறும் முதல்வர், கவுரவத்துடன் பதவியில் இருந்து விலக வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us