sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கிருஷ்ணாவிடம் ஆசிபெற்றார் சுரேஷ்

/

கிருஷ்ணாவிடம் ஆசிபெற்றார் சுரேஷ்

கிருஷ்ணாவிடம் ஆசிபெற்றார் சுரேஷ்

கிருஷ்ணாவிடம் ஆசிபெற்றார் சுரேஷ்


ADDED : மார் 30, 2024 02:46 AM

Google News

ADDED : மார் 30, 2024 02:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு ரூரல் தொகுதி, காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ், பா.ஜ., மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து ஆசிபெற்றார்.

துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரர் சுரேஷ், பெங்களூரு ரூரல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இம்முறை இவரை தோற்கடிக்க, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சிகள் முயற்சிக்கின்றன. தன் தம்பியை எதிர்க்கட்சிகள் குறிவைத்துள்ளதை உணர்ந்துள்ள சிவகுமார், பெங்களூரு ரூரல் தொகுதியில் கவனத்தை மையப்படுத்தியுள்ளார்.

கோவில்களை தரிசனம் செய்து, தம்பியின் வெற்றிக்காக வேண்டுகிறார். வேட்பாளர் சுரேஷ், தன் அண்ணன் சிவகுமார் உட்பட, மூத்த தலைவர்களின் ஆசி பெற்ற பின், ஊர்வலமாக சென்று நேற்று முன் தினம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை, பெங்களூரின், சதாசிவநகரில் உள்ள இல்லத்தில், சுரேஷ் சந்தித்தார்.

கிருஷ்ணாவின் கால்களில் விழுந்துஆசி பெற்றுக்கொண்டார். பின் இருவரும் சிறிது நேரம் பேச்சு நடத்தினர்.

இவர்களின் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சுரேஷ் கூறுகையில், ''கிருஷ்ணா கர்நாடகாவின், மூத்த அரசியல் தலைவர். முன்னாள் முதல்வருமான அவரை நேற்று சந்தித்து ஆசி பெற்றேன். அவரது நீண்ட கால அரசியல் அனுபவம், ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டார். இது எனக்கு வழிகாட்டியாகஇருக்கும்,''” என்றார்.






      Dinamalar
      Follow us