ADDED : ஏப் 09, 2024 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவனஹள்ளி: பெங்களூரு அருகே தைலமரத் தோப்பில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பெங்களூரு ரூரல் தேவனஹள்ளியில் இருந்து விஜயபுரா கிராமத்திற்கு செல்லும் வழியில், தைலமரத் தோப்புகள் அதிகமாக உள்ளன. நேற்று மதியம் ஒரு தோப்பில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென அடுத்தடுத்த மரங்களுக்கு பரவியது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், ஐந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்தனர்.
தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் 100க்கும் மேற்பட்ட மரங்கள், தீயில் கருகின.
ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தின்போது, தோப்புகளில் தீ விபத்து ஏற்படுகிறது. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

