ADDED : ஏப் 24, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்:பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதி பஞ்சாப் போலீசால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
ஜம்மு - -காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பயங்கரவாத இயக்கம், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை அங்கிருந்தவாறே இயக்கி வந்தது.
இதுபற்றி உளவுத்துறை அளித்த தகவல்படி பஞ்சாப் போலீஸ் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவரை கைது செய்து, அவரிடம் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் துப்பாக்கிக் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

