ADDED : ஏப் 23, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராய்ச்சூர் : வாகனம் மோதியதில், சாலையில் சென்ற மூன்று பாதசாரிகள் பலியாயினர்.
ராய்ச்சூரின், ஹெகசனஹள்ளி அருகில் நேற்று காலை சென்ற பொலிரோ வாகனம் வேகமாக சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நடந்து சென்ற பாதசாரிகள் மீது மோதியது.
இதில் அய்யனகவுடா, 28, மகேஷ், 24, உதயகுமார், 28, ஆகியோர் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். பூஷண் உட்பட இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் இறந்த மூவரும், ஹெகசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள்.
ராய்ச்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

