sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அத்துமீறி நுழைந்த 'ட்ரோன்'கள்: ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு

/

அத்துமீறி நுழைந்த 'ட்ரோன்'கள்: ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு

அத்துமீறி நுழைந்த 'ட்ரோன்'கள்: ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு

அத்துமீறி நுழைந்த 'ட்ரோன்'கள்: ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு


ADDED : ஏப் 01, 2024 11:24 PM

Google News

ADDED : ஏப் 01, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரஜோரி: பாகிஸ்தானில் இருந்து, நம் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு 'ட்ரோன்'கள் எனப்படும் ஆளில்லா விமானங்களின் மீது, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு விரட்டி அடித்தனர்.

ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நம் எல்லை பகுதிக்குள், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பினர், சமீபகாலமாக ட்ரோன் வாயிலாக கண்காணித்து ஊடுருவும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க, நம் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நேற்று ட்ரோன் பறந்ததை, நம் பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். அதை நோக்கி, ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனே, அந்த ட்ரோன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்தது.

இச்சம்பவம் அரங்கேறிய சில நிமிடங்களில், கேரி பகுதியில் மற்றொரு ட்ரோன் பறந்ததை பார்த்து, பாதுகாப்பு படையினர் சுட்டனர். அந்த ட்ரோனும், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தது. இதையடுத்து, நம் எல்லை பகுதிக்குள் ஏதேனும் ஊடுருவல் சம்பவம் அரங்கேறி உள்ளதா என்பது தொடர்பாக, ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us