ADDED : பிப் 27, 2025 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சி.ஆர். பார்க்:டியூஷனுக்கு வந்த மாணவியை மூன்று ஆண்டுகளாக பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
தெற்கு டில்லியின் 15 வயது சிறுமியை, அவரது கல்வி ஆசிரியர் மூன்று ஆண்டுகளில் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. போலீசார் விசாரணை நடத்தி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆசிரியரை கைது செய்தனர்.
கடந்த 2022 முதல் கல்வி மையத்தில் தன்னை பல முறை மனரீதியாக துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி குற்றஞ்சாட்டியிருந்தார்.

