ADDED : ஆக 10, 2024 02:19 AM
சண்டிகர்:“ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் கிடைத்திருப்பது, உண்மைக்குக் கிடைத்த வெற்றி,”என, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறினார்.
டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையால் மணீஷ் சிசோடியா கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்குகளில் சிறப்பு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை சிசோடியாவின் ஜாமின் மனுக்களை நிராகரித்த நிலையில், உச்ச நீதிமன்றம் நேற்று, சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கியது.
இதுகுறித்து, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கட்சியின் மூத்த தலைவரும், டில்லியின் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி இருப்பது உண்மைக்கு கிடைத்த வெற்றி,”என, கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 26ல் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

