sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசியலமைப்பை மீறுவதா? சபாநாயகருக்கு கவர்னர் கண்டனம்

/

அரசியலமைப்பை மீறுவதா? சபாநாயகருக்கு கவர்னர் கண்டனம்

அரசியலமைப்பை மீறுவதா? சபாநாயகருக்கு கவர்னர் கண்டனம்

அரசியலமைப்பை மீறுவதா? சபாநாயகருக்கு கவர்னர் கண்டனம்

12


ADDED : ஜூலை 06, 2024 02:38 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 02:38 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா, மேற்கு வங்கத்தில் தன் உத்தரவை மீறி, புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் பிமன் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு, அம்மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கவர்னர் ஆனந்த போசுக்கும், மாநில அரசுக்கும் இடையே துவக்கம் முதலே மோதல் போக்கு நிலவுகிறது.

போராட்டம்


சமீபத்தில், பராநகர், பக்வாங்கோலா ஆகிய தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், ஆளும் திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த சயந்திகா பானர்ஜி மற்றும் ரேயத் ஹொசைன் சர்கார், முறையே வெற்றி பெற்றனர்.

இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி, மேற்கு வங்க சட்டசபை சபாநாயகர் பிமன் பானர்ஜி, கவர்னர் ஆனந்த போசை கேட்டுக் கொண்டார்.

இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்து, கடந்த வாரம் சட்டசபை வெளியே, சயந்திகா பானர்ஜி மற்றும் ரேயத் ஹொசைன் சர்கார் போராட்டம் நடத்தினர்.

இடைத்தேர்தலில் வென்ற சயந்திகா பானர்ஜி மற்றும் ரேயத் ஹொசைன் சர்காருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி, துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜிக்கு, கவர்னர் ஆனந்த போஸ் நேற்று உத்தரவிட்டார்.

ஆனால், சட்டசபையில் நேற்று நடந்த சிறப்பு கூட்டத்தொடரில், சயந்திகா பானர்ஜி மற்றும் ரேயத் ஹொசைன் சர்காருக்கு, சபாநாயகர் பிமன் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

''சபாநாயகருக்கு முன்னுரிமை இருப்பதால், நான் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை,'' என, துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜி தெரிவித்தார்.

இது குறித்து, சமூக வலைதளத்தில் கவர்னர் ஆனந்த போஸ் கூறியதாவது:

எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி, துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜிக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அரசியலமைப்பு சட்டத்தை மீறி, சபாநாயகர் பிமன் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

கவர்னரால் நியமிக்கப்படும் நபரே பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியும் என அரசியலமைப்பு கூறும் நிலையில், அதை மீறி, பிமன் பானர்ஜி செயல்பட்டுள்ளார். இது குறித்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அறிக்கை அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முரண்டு


இதற்கு பதிலளித்த சபாநாயகர் பிமன் பானர்ஜி கூறுகையில், ''நாங்கள் கவர்னரையும், அரசியலமைப்பையும் மதிக்கிறோம். சட்டசபைக்கு வந்து கவர்னர் தான் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

''ஆனால், அவர் எங்களை மதிக்காமல் முரண்டு பிடிக்கிறார். நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவரை போல் நியமனம் செய்யப்பட்டவர்கள் அல்ல,'' என்றார்.

இதற்கிடையே, ''சட்ட சபையின் சிறப்பு கூட்டத் தொடர் குறித்து தனக்கு எதுவும் தெரியாது,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us