sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லிக்கு தண்ணீர் திறக்க ஹிமாச்சல் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

/

டில்லிக்கு தண்ணீர் திறக்க ஹிமாச்சல் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

டில்லிக்கு தண்ணீர் திறக்க ஹிமாச்சல் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

டில்லிக்கு தண்ணீர் திறக்க ஹிமாச்சல் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

6


UPDATED : ஜூன் 06, 2024 12:43 PM

ADDED : ஜூன் 06, 2024 12:20 PM

Google News

UPDATED : ஜூன் 06, 2024 12:43 PM ADDED : ஜூன் 06, 2024 12:20 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் குடிநீர் பிரச்னையால் மக்கள் அவதி அடைந்து வருவதால், கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என ஹிமாச்சல் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான வெப்ப அலையால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மக்கள் குடிநீருக்காக அல்லாடு கின்றனர். லாரிகளில் வரும் தண்ணீரை பிடிப்பதற்கு பெரும் போராட்டமே நடக்கிறது. கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, உபரி நீரை திறந்து விட ஹரியானா அரசுக்கு உத்தரவிடக் கோரி, அமைச்சர் ஆதிஷி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

தண்ணீர் திறக்க உத்தரவு

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, விஸ்வநாதன் ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன்பு இன்று (ஜூன் 06) விசாரணைக்கு வந்தது. அப்போது, , '' டில்லியில் குடிநீர் பிரச்னையால் மக்கள் அவதி அடைந்து வருவதால், ஹிமாச்சல் அரசு உபரிநீரை 137 கன அடி திறந்துவிட வேண்டும். இதனை ஹரியானா அரசு முறையாக டில்லிக்கு கொண்டு சேர்க்க வேண்டும். டில்லிக்கு வழங்கப்படும் நீரை எக்காரணம் கொண்டும் தடுத்து வைக்க கூடாது. குடிநீரை வீணாகாத வகையில் டில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என நீதிபதிகள் உத்தவிட்டுள்ளனர்.

நடவடிக்கை

டில்லியில் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடும் நிலையில், ஹிமாச்சல் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் டில்லி மக்கள் குடிநீர் பிரச்னையில் இருந்து மீண்டும், நிம்மதி அடையும் சூழல் ஏற்படும்.






      Dinamalar
      Follow us