sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாங்கள் இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள்: ராகுலை சாடிய அமித்ஷா

/

நாங்கள் இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள்: ராகுலை சாடிய அமித்ஷா

நாங்கள் இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள்: ராகுலை சாடிய அமித்ஷா

நாங்கள் இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள்: ராகுலை சாடிய அமித்ஷா

2


ADDED : ஏப் 28, 2024 02:39 PM

Google News

ADDED : ஏப் 28, 2024 02:39 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: 'பா.ஜ., 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால், நாட்டில் இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் என ராகுல் கூறுகிறார். எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டை நீக்க பா.ஜ., ஒருபோதும் அனுமதிக்காது' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: பா.ஜ., 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால், நாட்டில் இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் என ராகுல் கூறுகிறார். எங்கள் மீது அவர் பொய்களை பரப்பி வருகிறார். நாங்கள் இரண்டு முறை முழுப் பெரும்பான்மையுடன் இருந்தோம். ஆனால் இடஒதுக்கீட்டை நீக்கவில்லை. எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டை நீக்க பா.ஜ., ஒருபோதும் அனுமதிக்காது.

பழங்குடியினர்

தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின சகோதர, சகோதரிகளுக்கு உறுதியளிக்கிறேன். நாங்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள். சாதிவெறி, குடும்ப அரசியலை விட்டு, ஏழைகளின் நலனுக்காக பிரதமர் மோடி உழைத்து வருகிறார். ஒவ்வொரு ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பணியை மோடி செய்தார். காங்கிரஸ் எப்போதும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை எதிர்க்கின்றனர். பழங்குடியினர் நலனுக்காக காங்கிரஸ் எதும் செய்யவில்லை. அவர்களுக்கு நீதி கிடைக்க பாடுபடவில்லை. இவ்வாறு அமித்ஷா பேசினார்.






      Dinamalar
      Follow us