sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பண மோசடி வழக்கிலும் ஜாபர் சாதிக் கைது

/

பண மோசடி வழக்கிலும் ஜாபர் சாதிக் கைது

பண மோசடி வழக்கிலும் ஜாபர் சாதிக் கைது

பண மோசடி வழக்கிலும் ஜாபர் சாதிக் கைது


ADDED : ஜூன் 28, 2024 11:26 PM

Google News

ADDED : ஜூன் 28, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி, 2,000 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த பிப்ரவரியில் டில்லியில் கைது செய்தனர்.

இதில் மூளையாகச் செயல்பட்ட, தி.மு.க., சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக், 36, மார்ச் 9ல் கைது செய்யப்பட்டதை அடுத்து, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது அவர், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்த வழக்கில், டில்லியில் உள்ள திஹார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் நடந்த பண மோசடி குறித்து, அமலாக்கத் துறையினரும் தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தலில் நடந்த பண மோசடி வழக்கில், திஹார் சிறையில் வைத்து, கடந்த 26ல் ஜாபர் சாதிக்கை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

அவரை, விரைவில் சென்னைக்கு அழைத்து வந்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us