sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி

/

துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி

துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி

துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி


ADDED : அக் 04, 2025 08:22 AM

Google News

ADDED : அக் 04, 2025 08:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்துார் : மத்திய பிரதேசத்தில், துர்கா சிலைகளை கரைக்க நீர்நிலைக்கு எடுத்துச் சென்றபோது, டிராக்டர் குளத்தில் கவிழ்ந்ததில் அதில் சென்ற சிறுவர் - சிறுமியர் எட்டு பேர் உட்பட, 11 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.

மத்திய பிரதேசத்தின் காந்த்வா மாவட்டத்தில் உள்ள ஜம்லி கிராமத்தில் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப் பட்டது.

பந்தலில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகளை கரைப்பதற்காக டிராக்டரில் ஏற்றிக்கொண்டு, அருகேயுள்ள குளத்துக்கு பக்தர்கள் நேற்று முன்தினம் சென்றனர்.

அப்போது அதில் சிறுமி - சிறுமியர் உட்பட 25 பேர் அமர்ந்திருந்தனர்.

குளத்தின் அருகே டிராக்டரை பின்நோக்கி இயக்கியபோது கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்தது. இதில், டிராக்டரில் இருந்த சிறுவர், சிறுமியர் எட்டு பேர் உட்பட 11 பேர் நீரில் மூழ்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த நீச்சல் வீரர்கள் மற்றும் மீட்புப்படையினர், 11 பேர் சடலங்களை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சிலர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்பதால், தொடர்ந்து மீட்புப்பணி நடக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படுவதாக, பா.ஜ.,வை சேர்ந்த ம.பி., முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us