11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை; ராஜ்யசபாவில் மத்திய அரசு தகவல்
11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை; ராஜ்யசபாவில் மத்திய அரசு தகவல்
ADDED : மார் 18, 2025 09:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி; திருச்சி உள்ளிட்ட 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் கூறி உள்ளார்.
இதுதொடர்பாக ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு;
திருச்சி, அமிர்தசரஸ், வாரணாசி, புவனேஸ்வர், ராய்ப்பூர் விமான நிலையங்கள், 6 சிறிய விமான நிலையங்களின் இயக்கம், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு பணிகளை அரசு மற்றும் தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியாரிடம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் அந்த பதிலில் தெரிவித்துள்ளார்.