ADDED : நவ 11, 2024 05:13 AM
பெங்களூரு: போக்குவரத்து விதிமீறல் செய்ததாக, செயலி அடிப்படையில் இயங்கும் இ - டாக்சி, உணவு வினியோகம், பிற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மீது 2,670 வழக்குகள் பதிவு செய்த போக்குவரத்து போலீசார், 13.78 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்து உள்ளனர்.
பெங்களூரில் செயலி மூலம் இ - டாக்சி, உணவு வினியோகம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும், போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. இது தொடர்பாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 781 பேரும்; வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பேசியது 26; சிக்னல் ஜம்ப் 45; நோ என்ட்ரியில் சென்றது 404; டூ வீலரில் மூவர் பயணித்தது 52; வாகன நிறுத்த அனுமதியில்லாத இடத்தில் நிறுத்தியது 105; நம்பர் பிளேட் குறைபாடு 119; நடைபாதையில் ஓட்டியது 44; நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டியது உட்பட 2,670 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இவர்களிடம் இருந்து 13.78 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.