sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வந்தே மாதரம் 150வது ஆண்டு நிறைவு: கொண்டாட மஹாராஷ்டிராவில் சிறப்பு ஏற்பாடு

/

வந்தே மாதரம் 150வது ஆண்டு நிறைவு: கொண்டாட மஹாராஷ்டிராவில் சிறப்பு ஏற்பாடு

வந்தே மாதரம் 150வது ஆண்டு நிறைவு: கொண்டாட மஹாராஷ்டிராவில் சிறப்பு ஏற்பாடு

வந்தே மாதரம் 150வது ஆண்டு நிறைவு: கொண்டாட மஹாராஷ்டிராவில் சிறப்பு ஏற்பாடு


ADDED : நவ 05, 2025 08:02 PM

Google News

ADDED : நவ 05, 2025 08:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் 150 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நவம்பர் 7 ஆம் தேதி வெகுஜென இசை நிகழ்ச்சிக்கு மஹாராஷ்டிர அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த முயற்சி மத்திய கலாச்சார அமைச்சகத்தால் இயக்கப்பட்டு மகாராஷ்டிரா அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் நாடு தழுவிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த நிகழ்வு தேசிய பெருமை உணர்வை வளர்ப்பதையும், குடிமக்களை, குறிப்பாக இளைஞர்களை, தேசியப் பாடலின் வரலாற்று மற்றும் உணர்ச்சி முக்கியத்துவத்துடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டது.

விழா குறித்து திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் மங்கல் பிரபாத் லோதா கூறியதாவது:

தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு விழா நவம்பர் 7 ஆம் தேதி மந்திராலயாவில் வெகுஜன பாராயணம் மூலம் தொடங்கும்.

மாநில செயலகத்தில் உள்ள திரிமூர்த்தி அரங்கில் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொள்வார்.

'இந்த நிகழ்வு 'சர்த் சதாப்தி மஹோத்சவ்' முயற்சியின் கீழ் மாநிலம் முழுவதும் ஒரு வருடம் நீடிக்கும் கொண்டாட்டத்தைத் தொடங்கும். இவ்வாறு மங்கல் பிரபாத் லோதா கூறினார்.






      Dinamalar
      Follow us