sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உ.பி.யில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 24 மணிநேரத்தில் 18 பேர் பலி

/

உ.பி.யில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 24 மணிநேரத்தில் 18 பேர் பலி

உ.பி.யில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 24 மணிநேரத்தில் 18 பேர் பலி

உ.பி.யில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 24 மணிநேரத்தில் 18 பேர் பலி

1


ADDED : ஜூலை 19, 2025 11:57 AM

Google News

1

ADDED : ஜூலை 19, 2025 11:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உ.பி.யில் கடந்த 24 மணி நேரத்தில் மழைக்கு 18 பேர் பலியாகி உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழை எதிரொலியாக, நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை, வெள்ளத்தில் மட்டும் சிக்கி கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சித்ரகூட் மாவட்டத்தில் அதிக அளவாக 6 பேர் மழைக்கு பலியாகி இருக்கின்றனர். மஹோபா, பண்டா மற்றும் மொராதாபாத் பகுதிகளில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். காசிப்பூர், லலித்பீர், கோண்டா பகுதிகளில் தலா ஒருவர் பலியாகி இருக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக 24 மணிநேரத்தில் 18 பேர் இறப்புகள் பதிவாகி உள்ளதாக மாநில அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, மாநிலத்தின் மீரட், நொய்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்றும் மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us