விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த விவகாரம்: அதிகாரிகள் 2 பேருக்கு சிறை தண்டனை
விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த விவகாரம்: அதிகாரிகள் 2 பேருக்கு சிறை தண்டனை
ADDED : அக் 18, 2025 12:07 PM

அமராவதி: விசாகப்பட்டினத்தில் கடற்படை அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில், உளவுத்துறை அதிகாரிகள் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 11 கடற்படை அதிகாரிகள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு முக்கியத் தகவல்களைக் கசியவிட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை நடந்து வந்தது.
பின்னர் இந்த வழக்கு என்ஐஏக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 11 இந்திய கடற்படை வீரர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், மும்பையைச் சேர்ந்த முகமது ஹாரூனுக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனையும், குஜராத்தின் கோத்ராவைச் சேர்ந்த இம்ரான் யாகூப் கீதேலிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்திய கடற்படையின் முக்கிய தகவல்களை திருடியதற்காக உளவுத்துறை அதிகாரிகள் இருவருக்கும் கடும்காவல் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு உளவுப்பார்த்த இந்த வழக்கு பரபரப்பை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.